பள்ளிகளில் மதிய உணவு திட்டம் : ஐந்தாண்டு நீட்டிக்க ஒப்புதல்

Updated : அக் 01, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி நேற்று ஒப்புதல் அளித்தது.நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 11.20 லட்சம்
 பள்ளிகளில் மதிய உணவு திட்டம் : ஐந்தாண்டு நீட்டிக்க ஒப்புதல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட்
கமிட்டி நேற்று ஒப்புதல் அளித்தது.

நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 11.20 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த 11.80 கோடி குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 2020 - 21ம் நிதியாண்டில், மதிய உணவு திட்டத்திற்காக, மத்திய அரசு 24 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இதில் 2021 - 22 முதல் 2025 - 26 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு, மதிய உணவு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இது குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு, மத்திய அரசு 54 ஆயிரத்து 61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து 31 ஆயிரத்து 733 கோடி ரூபாய் நிதி பெறப்படும். இதை தவிர, உணவு தானியங்களுக்காக 45 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.இந்த திட்டத்திற்காக, மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 794 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களைத் தவிர, பால்வாடிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் மதிய உணவு திட்டம் விஸ்தரிக்கப்பட உள்ளது. தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் உட்பட நாட்டின் 117 மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்க சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

DVRR - Kolkata,இந்தியா
30-செப்-202117:15:58 IST Report Abuse
DVRR பார்த்தீர்களா எங்களை தலைவர் ஸ்டாலின் வந்ததும் இந்த அறிவுப்பு எல்லாம் ஸ்டாலின் சொல்படி தான் இந்த உலகம் சுழலுகின்றது - இப்படிக்கு ஸ்டாலின் டப்பா அடிக்கும் சங்கம்
Rate this:
Cancel
asokan - Palani,இந்தியா
30-செப்-202116:30:13 IST Report Abuse
asokan நல்ல திட்டம் தான் இதில் உள்ள ஊழல் முறைகேடுகளைக் களைந்து திட்டத்தின் முழுப்பயனும் மாணவர்களைசென்றடைய வேண்டும் . சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஆய ... எல்லாவற்றையும் வேலியில் விற்கின்றனர் . அதற்கு அடிப்படாய்க்காரணம் அவர்கள் அனைவரும் கட்சி சிபாரிசின் அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுகின்றனர்.அதைத்தவிர்த்து மெரிட் அடிப்படையில் நியமிக்கப்படவேண்டும் . தீவிர கண்காணிப்பு வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X