இடைப்பாடி: கொங்கணாபுரம், புதுக்குடியானூரை சேர்ந்தவர் கோகிலா, 32. அருகில் உள்ள பாச்சாலீயூரை சேர்ந்த ஆனந்தனுக்கு, 8 ஆண்டுக்கு முன், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்பணத்தை, கோகிலா பலமுறை கேட்டும் தரவில்லை. கடந்த, 26ல் ஆனந்தன் வீட்டுக்கு சென்ற அவர், பணத்தை கேட்டுள்ளார். அதில் தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த ஆனந்தன், 45, அவரது மனைவி சின்னபொண்ணு, 40, மகன் பாலமுருகன், 23, ஆகியோர், கோகிலாவை தாக்கினார். கோகிலா இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, ஆனந்தன் உள்பட மூன்று பேர் மீது, கொங்கணாபுரம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement