வில்லியனுார்-அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உலக இருதய நாள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்து. வெங்கடேஸ்வரா கல்விக்குழும சேர்மன் ராமச்சந்திரன் வழிகாட்டுதலில் நடந்த முகாமிற்கு, கல்விக்குழும முதன்மை இயக்க அதிகாரி வித்யா தலைமை தாங்கினார். மருத்துவக் கல்லுாரி டீன்கள் ரத்தினசாமி, மகாதேவன் முன்னிலை வகித்தனர்.மருத்துவ கண்காணிப்பாளர் வி.பி.சிங் வரவேற்றார். சமுதாய நலதுறை தலைமை மருத்துவர் வேதபிரியா, இருதய சிகிச்சை நிபுணர் பாஸ்கரன் சீனிவாசன், பொது மருத்துவ துறை டாக்டர் சுரேஷ், ஆகியோர் இருதய நோய் மற்றும் சிகிச்சைகள் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினர்.இருதய சிகிச்சை சிறப்பு பரிசோதனை முகாம் நடந்தது. இருதய நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள், மருத்துவ குழுவினர் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு பட கண்காட்சி வைக்கப்பட்டது.ஏற்பாடுகளை மருத்துவமனை துணை பொது மேலாளர் புகழேந்தி செய்தார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE