பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் வாயிலாக, 5 வயதுக்கு உட்பட்ட, 10 ஆயிரம் குழந்தைகளுக்கு, வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.இந்தியா முழுவதும் ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான குழந்தைகள் வயிற்றுப் போக்கால் உயிரிழக்கின்றனர். இதை கட்டுப்படுத்த, தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், 2 வார கால வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்து முகாம் ஆண்டுதோறும் நடக்கிறது.தமிழகம் முழுவதும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு வார கால வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடந்தது. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு, வயிற்றுப்போக்கு கட்டுப்பாடு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், குழந்தைகளுக்கு, ஓ.ஆர்.எஸ்., கரைசல் பொட்டலம், ஜிங் மாத்திரைகள் வழங்கப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 9 ஊராட்சி மற்றும் நான்கு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும், 5 வயதுக்குட்பட்ட, 10 ஆயிரம் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., கரைசல் பொட்டலம், ஜிங் மாத்திரைகள் வழங்கப்பட்டன. சுகாதாரம், அங்கன்வாடி, கல்வித்துறை பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE