சென்னை: 'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை படு வேகமாக செயல்பட்டு வருகிறார். எந்த பிரச்னையையும் திறமையாக கையாள்கிறார்.சிக்கலான விஷயங்களையும் எளிதாக முடித்து வைக்கிறார்' என, டில்லி பா.ஜ., தலைவர்கள் சொல்கின்றனர்.

குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, இவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். 'அண்ணாமலையின் செயல்பாட்டால், தமிழக அரசியலில் அவருக்கு அதிக அளவில் எதிர்ப்புகள் உள்ளன. அவர் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது' என, உளவுத்துறையினர் அமித்ஷாவிற்கு அறிக்கை அளித்துள்ளனர்.

இதையடுத்து, அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவெடுத்துள்ளார்.