ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் காந்தி பிறந்த நாள், பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் சேவை மற்றும் அர்ப்பணிப்பு இயக்கம் சார்பில்,பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேச்சு, கட்டுரைபோட்டிகள் மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் சிவசங்கரன், மாவட்ட செயலாளர் சவுந்திரபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் குமார், சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல்லா, ஓ.பி.சி., அணி மாரிமுத்து, நகர் தலைவர் வீரபாகு, தேவிப்பட்டினம் விவேகானந்தா வித்யாலயா முதல்வர் தீனதயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் 9 முதல் பிளஸ் 2 வரை பேச்சுப்போட்டியில் டான்போஸ்கோ பள்ளி மாணவி தர்ஷினி முதல் பரிசு பெற்றார். ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது ஆதில் இரண்டாம்பரிசும், ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ராஜேஷ் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE