சென்னை: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, 'சிலிண்டர்' விலை, 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.915 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன. வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைக்கொண்ட சிலிண்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் சிலிண்டர் விலை ரூ.915க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் கடந்த 1ம் தேதி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு சிலிண்டரும் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE