ஸ்ரீநகர்: காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு நடத்துவதற்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆட்கள் தேர்வு செய்தது தொடர்பாக கடந்த ஜூன் 29ல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக ஜூலை 11ல் சோதனை நடத்தி 3 பேரை கைது செய்தனர். அதேபோல், கடந்த ஜூன் மாதம் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளிடம் இருந்து 5 கிலோ ஐ.இ.டி வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மற்றொரு வழக்குப்பதிவு செய்து, கடந்த மாதம் பல இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில் நடந்த விசாரணையில், சம்பவத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக காஷ்மீரில் ஸ்ரீநகர், ஆனந்த்நாக், குல்காம் உள்ளிட்ட 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் உதவியுடன் இந்த சோதனை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE