புதுடில்லி-'ஒரு வழக்கில் முன்ஜாமின் வழங்கும் முன், குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தை கருத்தில் கொள்ள வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் நடந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் சமீபத்தில் முன் ஜாமின் வழங்கியது.அதனை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.விசாரணை முடிவில் உயர் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமினை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கொலை வழக்கில் முன்ஜாமின் வழங்கும் முன், குற்றத்தின் அடிப்படைத்தன்மை, அதுதொடர்பான ஆதாரங்கள், குற்றத்தில் முன்ஜாமின் கோருவோருக்கு உள்ள தொடர்பு உள்ளிட்டவற்றை நீதிமன்றங்கள் ஆராய வேண்டும். இந்த வழக்கில் குற்றத்தின் தன்மை, கொலையில் முன்ஜாமின் கோரியவர்களின் பங்கு உள்ளிட்டவற்றை பார்க்கும்போது உயர் நீதிமன்றத்தின் முடிவு சரியானது அல்ல என தெளிவாகிறது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE