எண்ணுார் : மேம்பாலத்தின் பக்கவாட்டில் உள்ள அணுகு சாலையில் மழை நீர் தேங்கியிருப்பதால், பாதசாரிகள் அவதியுறுகின்றனர்.
பர்மா நகர், எண்ணுார், எர்ணாவூர் ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் வகையில், மூன்று வழி பாலமாக, எண்ணுார் கத்திவாக்கம் மேம்பாலம் உள்ளது.இதில், எர்ணாவூரில் இருந்து கத்திவாக்கம் மேம்பாலம் ஏறும் இடத்தில், இருபுறமும் அணுகு சாலை உள்ளது.மேம்பாலத்தின் வலது புறம் உள்ள அணுகு சாலையில், சாதாரண மழைக்கே முழங்கால் அளவு மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவ்வழியை பயன்படுத்த முடியவில்லை.
மாறாக, இடப்புறம் உள்ள ஒரே அணுகு சாலையில், எதிரெதிரே வாகனங்கள் பயணிக்கும் நிலை உள்ளது. இதற்கு, அப்பகுதியில் கட்டப்பட்டு வரும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.கட்டுமான பகுதி உயர்ந்திருப்பதால், சாலை தாழ்வாகி மழை நீர் தேங்கி உள்ளது. எனவே, கட்டுமான நிறுவனம் தான், இந்த மழை நீரை அகற்றிக் கொடுக்க வேண்டும் என, அச்சாலையை பயன்படுத்துவோர் குறிப்பிடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE