நடுவீரப்பட்டு : பண்ருட்டி- கடலுாருக்கு மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ருட்டி-கடலுார் செல்லும் வழியில் திருவதிகை, முத்துகிருஷ்ணாபுரம், நரிமேடு, பாலுார், குயிலாப்பாளையம், அருங்குணம், வானமாதேவி, சுந்தரர்பாடி, திருவந்திபுரம் உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கடலுார், பண்ருட்டியில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த வழிதடத்தில் அரசு பஸ்சை மட்டுமே நம்பி பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாகி மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கிச் செல்கின்றனர். வேலைக்கு செல்பவர்கள், பண்ருட்டியில் மளிகை பொருட்களை வாங்கி சென்று, கிராமங்களில் விற்கும் வியாபாரிகள் என பலரும் காலை நேரத்தில் பஸ்களில் செல்வதால் மாணவர்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
அடுத்த மாதம் முதல் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு செல்ல நேர்ந்தால் பஸ்களில் மேலும் கூட்டம் அதிகரிக்கும் நிலை உள்ளது. ஆகையால் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் வானமாதேவியிலிருந்து பண்ருட்டிக்கும், கடலுாருக்கும் பஸ் இயக்கவும், காலை, மாலை பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கவும் மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE