மும்பை: மஹாராஷ்டிராவில் கோவிட் பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள், வரும் 22ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு மாநிலங்களும் பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், மால்கள், பூங்காக்களை மூடின. மஹாராஷ்டிராவில் கோவிட் பாதிப்பு குறைந்ததையடுத்து கடந்த ஆண்டு நவ., மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், அங்கு கோவிட் 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல்வெறு மாநிலங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தாலும் மஹாராஷ்டிராவில் தொடர்ச்சியாக அதிகரித்தது. இதனால் மீண்டும் திரையரங்கு உள்ளிட்டவை மூடப்பட்டன.

இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் கோவிட் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து அங்கு, திரையரங்குகள் மற்றும் பொது அரங்குகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்து உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீதத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE