சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,303 -ல் இருந்து 1,289 ஆக சற்று குறைந்துள்ளது. 18 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,421 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,37,548 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,289 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,80,857 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,87,41,297 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 757 பேர் ஆண்கள், 532 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,64,713 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,16,106 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,421 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,29,201 ஆக உயர்ந்துள்ளது.
18 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். 8 பேர் தனியார் மருத்துவமனை யிலும் 10 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,814 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக இருந்த நிலையில் இன்று (அக்.12 ம் தேதி) 164 ஆக குறைந்துள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE