புதுடில்லி:நாட்டில், 2020 - 2021 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பயணியர் ரயில் சேவை வாயிலாக 10 ஆயிரத்து 513 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இது முதல் காலாண்டை விட, 113 சதவீதம் அதிகமாகும்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. எனினும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததும், ரயில் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டன. தற்போது, 96 சதவீத ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பயணியர் ரயில் சேவையால் ஈட்டப்படும் வருமானம் குறித்த தகவல்களை, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கோரி இருந்தார்.அதற்கு பதிலளித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:
நாட்டில், 2020 - 2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் பயணியர் ரயில் சேவை வாயிலாக, 4,921 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது. இதே பயணியர் ரயில் சேவை வாயிலாக இரண்டாம் காலாண்டில், 10 ஆயிரத்து, 513 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது, முதல் காலாண்டை விட, 113 சதவீதம் அதிகமாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE