கோல்கட்டா: எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் அதிகரிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்., விமர்சித்துள்ளது.
அண்டை நாடுகளிலிருந்து மேற்கண்ட மாநிலங்களில் சட்டவிரோதமாக உட்புகும் குடிமக்களை கைதுசெய்து குறிப்பிட்ட நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கு அனுப்புவது எல்லைப் பாதுகாப்பு படையின் பணியாகும். இதனை அந்தந்த மாநில காவல் துறையுடன் இணைந்து எல்லைப் பாதுகாப்புப் படை செய்து வந்தது. ஆனால் எல்லை மாகாணங்களில் ஊடுருவல் அதிக அளவில் இருப்பதன் காரணமாக சமீபத்தில் மத்திய மோடி அரசு எல்லைப் பாதுகாப்பு படைக்கு அதிக அளவுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்த அதிகாரத்தின் மூலமாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் எல்லை மாகாணங்களில் மாநில காவல் துறையின் அனுமதி இல்லாமல் பிற நாடுகளிலிருந்து ஊடுருபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தற்போது திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறியதாவது: மாநில அரசுகளின் உரிமை தொடர்ந்து மோடி அரசால் நசுக்கப்பட்டு வருகிறது. இந்த மசோதாவை தாக்கல் செய்யும் முன்னர் மேற்குவங்க மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், அதனை செய்ய மோடி அரசு தவறி விட்டது.
மத்திய அரசு கட்டுபடுத்தும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிக அளவு அதிகாரம் வழங்கும்போது அனைத்து எல்லை மாநிலங்களில் உள்ள காவல்துறைக்கு அதிகாரம் குறைகிறது. இதன்காரணமாக எல்லையில் பல அப்பாவி குடிமக்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE