சிறுநீரக கோளாறு உள்ளோருக்கு, இயந்திரம் மூலம் செயற்கையாக ரத்தத்தை சுத்திகரிப்பர். டயாலிசிஸ் என்று அழைக்கப்படும் இந்த சிகிச்சைக்கு இப்போதும் கூட சில ஆயிரம் ரூபாய்கள் தேவை. இந்த குறையை போக்க ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஒரு புதிய டயாலிசிஸ் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். சிட்னியைச் சேர்ந்த 'எல்லன் மெடிக்கல் டிவைசஸ்' இந்த புதிய கருவியை வடிவமைத்துள்ளது.
வரும் 2030க்குள், சிறுநீரக கோளாறால் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை தொடவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. இப்போதே கூட, டயாலிசிஸ் தேவைப்படுவோரில் 75 சதவீதம் பேருக்கு, அந்த சிகிச்சையை செய்யும் வசதி இல்லை. எனவே தான், எல்லன் நிறுவனத்தின் கருவிக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
வீட்டில் இருக்கும் கெட்டில், பைகள், உப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை வைத்தே இந்தக் கருவி மிகவும் எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என எல்லன் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், இக்கருவி மூலம் டயாலிசிஸ் செய்யும்போது, தற்போது ஆகும் செலவில் 10 சதவீதம் மட்டுமே இதற்கு ஆகும் எனவும் அதிகாரி கள் கூறியுள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள டயாலிசிஸ் நோயாளி களுக்கு இந்த செய்தி இனிக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE