நாகர்கோவில்: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (திங்கள்கிழமை ) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
![]()
|
இது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணாக பேச்சிப்பாறை அணைகள் நிரம்பியது. தொடர் மழை காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.மேலும் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
![]()
|
இதனிடையே மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (திங்கள்கிழமை ) விடுமுறை விடப்படுகிறது என அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement