தேஜ்பூர் : அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் சீனாவுடனான எல்லை பகுதியில் பகல் - இரவு நேர கண்காணிப்பை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அதிகரித்துள்ளனர்.
கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு சீன ராணுவம் அத்துமீறியதை தொடர்ந்து சீனாவுக்கும் நமக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் படைகளை இரு நாடுகளும் குவித்துஉள்ளன.நம் நாட்டின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள எல்லையிலும் சீன ராணுவ வீரர்கள் சமீபத்தில்அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்த ராணுவ நிலைகளை சேதப்படுத்தினர். சீன வீரர்களை நம் ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர்.

இந்நிலையில் அருணாச்சலில் சீனாவுடனான எல்லை பகுதியில் பகல் - இரவு நேர கண்காணிப்பை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அதிகரித்துள்ளனர்.'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வழியாக எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியை கண்காணித்து சீனாவின் எந்த அத்துமீறலையும் முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE