கோவிட்டில் இறந்தோர்  குடும்பத்திற்கு இழப்பீடு?
கோவிட்டில் இறந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு?

கோவிட்டில் இறந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு?

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை--'கோவிட் தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், நிதித் துறையும் முடிவு செய்யும்' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவிட் தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, உரிய இழப்பீடு வழங்குமாறு, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.அதைத் தொடர்ந்து, மாநில அரசுகள்,

சென்னை--'கோவிட் தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், நிதித் துறையும் முடிவு செய்யும்' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news


கோவிட் தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, உரிய இழப்பீடு வழங்குமாறு, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.அதைத் தொடர்ந்து, மாநில அரசுகள், தங்களின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கும்படி, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.



latest tamil news

இதன்படி, நிதி உதவி வழங்க, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், முதல்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தமிழகத்தில் இதுவரை, 35 ஆயிரத்து 884 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பத்திற்கு எப்போது இழப்பீடு வழங்கப்படும் என, பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.



இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், கோவிட் தொற்றால் உயிர்இழந்தோர் குறித்த அனைத்து தரவுகளும், விபரங்களும், மாநில அரசிடம் உள்ளன. அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், நிதி துறையும் முடிவு செய்ய வேண்டும். இழப்பீடு வழங்குவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டால், அதற்கான ஒத்துழைப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை அளிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

ThiaguK - Madurai,இந்தியா
18-அக்-202112:50:38 IST Report Abuse
ThiaguK எல்லா செலவும் சம்திங் கொடுத்தது போக வீட்டுக்கு எவ்வளவு பணம் எடுத்துக்கிட்டு போகமுடியுமோ
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
18-அக்-202110:20:07 IST Report Abuse
S. Narayanan கோவி இட் தொற்றால் உயிர் இழந்தவர்களுக்கு ஸ்டாலின் ஒரு கோடி இழப்பீடு தருவேன் என்று உளமார உறுதி கூறினார். அது இப்போது 50 ஆயிரமாக குறைந்து விட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டது. அப்புறம் அதுவும் தேய்ந்து ஆப் ஆகிவிடும். புரியவில்லை அல்லவா. முன்பு கொரானாவால் உயிர் இழந்தவர்களுக்கு இது வேறு இறப்பு என்று certificate கொடுத்து நாமம் போட்டு விட்டார்கள். இப்போதும் அதே கதி தான். இவர்கள் இழப்பீடு வழங்குவர் என்று நினைத்து நினைத்து அவ்வளவு பெரும் போய் சேர்ந்து விடுவார். அப்புறம் விடியல் தான்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
18-அக்-202107:59:29 IST Report Abuse
duruvasar டோக்கன் கும்பலுக்கு வேலை வந்துவிட்டது. இதில் எத்தனை கட்டிங் இருக்குமோ. கனி அக்கா அறிவுறுத்தலை அனுதினமும் காணும் பேறு பெற்றவர்கள் தமிழர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X