முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமான நிர்வாகி வீட்டில் ரெய்டு

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
சேலம்: முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நபர்களின் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதன்படி கடந்த வாரம் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார்

சேலம்: முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நபர்களின் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.




latest tamil news


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதன்படி கடந்த வாரம் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் 600 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று (அக்.,22) சேலத்தில் 17 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும் , திருச்சி, கரூர், தலா ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.




மாநில கூட்டுறவு வங்கி தலைவர்



latest tamil news


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும், அதிமுக.,வின், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராகவும் உள்ளார். முன்னாள் முதல்வர் பழனிசாமியின் நிழலாகவும் உள்ளார். இளங்கோவன் அவரது மகன் பிரவீன் ஆகியோர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர்.



இதுதொடர்பாக இன்று காலை 6 மணி முதல் இளங்கோவனின் வீடு, தோட்டம், அவருக்கு சொந்தமான துறையூரில் உள்ள வேளாண் கல்லூரி, பெட்ரோல் பங்க் உள்பட மொத்தம் 24 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-அக்-202118:30:50 IST Report Abuse
D.Ambujavalli இந்த ரெயிடு நாடகம் நிறைய பார்த்தாயிற்று ‘என் டெர்மில் நான் தின்கிறேன் உன் முறையில் நீ தின்னு’ என்ற அண்டர்ஸ்டாங்டிங் எப்போதோ வந்தாயிற்று. ‘ஆஹா, தேர்தல் சமயம் கூறியபடி ஊழல்வாதிகளை வளைத்துவிட்டாரே’ என்று மக்களுக்கு ஒரு பிம்பம் காட்ட வேண்டும், அதுவே உள்ளாட்சி ஒட்டாகும் அவ்வளவுதான் ஒரு திரும்பும் பறிமுதல் ஆகாது அடுத்து நிதி அமைச்சர் ஆளுக்கு எட்டு லட்சம் கடன் என்பார்
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
22-அக்-202118:11:10 IST Report Abuse
Elango ரெய்டு வெறும் கண் துடைப்பு வேலுமணி ரெய்டு முடிந்து விட்டது இனி அவர் நல்லவர்...சிறை தேவை இல்லை விஜயபாஸ்கர் ரெயிடும் முடிந்து விட்டது அவர் நல்லவர் சிறை தேவை இல்லை.MR விஜயபாஸ்கர்,வெல்லமண்டி நடராஜன் நல்லவர்கள் ஆகி விட்டனர்....இப்படி தான் நடக்கும் எந்த மாஜியும் சிறை செல்ல தேவை இல்லை...
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
22-அக்-202116:27:24 IST Report Abuse
ganesha இன்னிக்கி ஈ பி ஸ் நிச்சயமா நாளைக்கு ஓ பி ஸ். இது தெரியாமல் இருக்கிறார் ஓ பி ஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X