வால்பாறை: வால்பாறை நகராட்சியில் நிறைவு செய்யப்பட்ட பணிகளுக்கு, பணம் வழங்க கோரி, ஒப்பந்ததார்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வால்பாறை நகராட்சியில் மொத்தம், 45 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அப்போதைய நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ், வளர்ச்சிப்பணிகளில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதை, குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை தி.மு.க., பொறுப்பாளர் பால்பாண்டி, முன்னாள் நகராட்சி தலைவர் கணேசன் மற்றும் ஒப்பந்ததாரர்கள், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் தலைமையில், நகர்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து, மனு கொடுத்தனர்.
நகராட்சி ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், 'வால்பாறை நகராட்சியில், தேர்தல் நேரத்தில் செய்த பணிகள் மற்றும் வார்டுகளில் மேற்கொண்ட வளர்ச்சிப்பணிகளுக்கான பில், சுமார், 1.5 கோடி ரூபாய் இது வரை வழங்கப்படவில்லை. அந்த பணத்தை வழங்கிய பிறகே, இனி ஒப்பந்தப்பணிகள் மேற்கொள்வோம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE