சென்னை மாநகராட்சியின், பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கம், ராம்நகர் அமைந்துள்ளது.
இங்குள்ள குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இந்நகரில், ஏராளமான காலி மனைகள் உள்ளன. சம்பந்தப்பட்ட உரிமையாளர்களால் அவை பராமரிக்கப்படாமல் உள்ளதால், பல இடங்களில் புதர் மண்டியுள்ளது. மடிப்பாக்கத்தில், பாதாள சாக்கடை வசதி இல்லாததால், அக்கம் பக்கத்தினர் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், காலி மனைகளில் விடப்படுகிறது.
மழைக்காலங்களில், கழிவு நீருடன் மழை நீர் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், காலி மனைகளில் தேங்கும் மழை நீரில், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ளது. தொடர் மழைக்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, காலி மனைகளில் நீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement