திருப்பூர் : ''சொன்னதை செய்யாத கட்சி தி.மு.க., என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்,'' என்று, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
திருப்பூர் பெரியார் காலனியில், அ.தி.மு.க., பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான ஜெயராமன், 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது.
அ.தி.மு.க., என்பது மக்களின் கட்சி. இதில் யார் வேண்டுமானாலும் தலைவராகலாம்; முதல்வராகலாம். தொண்டர்களால் வழிநடத்தப்படும் கட்சி என எம்.ஜி.ஆர்., கூறி உள்ளார்.எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், பன்னீர்செல்வம், பழனிசாமி முதல்வராயினர். கிளைச் செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை நாடாளும் ஜனரஞ்சகமான கட்சியாக, அ.தி.மு.க., விளங்குகிறது. தாய்மார்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என தி.மு.க., உறுதிமொழி அளித்தது. இன்று வரை வழங்கப்படவில்லை. 'சொன்னதை செய்யாத கட்சி அது' என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE