புதுச்சேரி : 'புதுச்சேரி மாநிலத்திற்கென தனியான விளையாட்டு துறையை உருவாக்கி, ஒலிம்பிக் சங்கம் தொடங்கப்படும்' என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில கபடி சங்கத்துடன் இணைந்து வி.எம்.வி. குரூப் ஆப் கம்பெனி நடத்திய 47வது கபடி போட்டி ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. ஓம் அங்காளம்மன் சுழற்கோப்பைக்கான மகளிர் பிரிவு இறுதிப்போட்டியில் அரியாங்குப்பம் ரான்ஸ் அணியை வீழ்த்தி, வில்லியனுார் கோட்டைமேடு மறவர் அணி வெற்றி பெற்றது.போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கோப்பை, ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப்பரிசு வழங்கி அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:பிரதமர் மோடி, விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். புதுச்சேரி பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு துறையை மேம்படுத்த மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கிராமங்கள்தோறும் மினி ஸ்டேடியம், வாலிபால், கிரிக்கெட் மற்றும் கபடி மைதானங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.விளையாட்டு துறை இட ஒதுக்கீட்டில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றிட, கல்வித்துறையில் இருந்து விளையாட்டு துறையை பிரித்து தனித்துறையை துவக்க முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளேன். அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். கபடி சங்கம் வைத்துள்ள கோரிக்கை அடிப்படையில், புதுச்சேரியிலும் ஒலிம்பிக் சங்கம் துவங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement