ஜம்மு: அரசு முறை பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, புல்வாமாவில் உள்ள சி.ஆர்.பி.எப்., முகாமில் நேற்று (அக்., 25, திங்கள் கிழமை) இரவு தங்கினார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்துள்ள அமித் ஷா, பாதுகாப்பு நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தார். இந்நிலையில் நேற்று புல்வாமாவில் உள்ள சி.ஆர்.பி.எப்., முகாமுக்கு சென்ற அமித் ஷா, வீரர்களுடன் கலந்துரையாடினார்.

வீரர்கள் மத்தியில் பேசிய அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் பயணத்திலேயே, சி.ஆர்.பி.எப்., முகாமுக்கு வந்தது தான் முக்கிய நிகழ்ச்சி எனவும், இன்றைய இரவை உங்களுடன் தங்கி உங்கள் பிரச்னையை புரிந்து கொள்ள விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்களுடன் இரவு உணவு அருந்திய அமித்ஷா, முகாமிலேயே இரவு தங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE