உடுமலை: உடுமலையில், ரவுண்டானா அமைத்தும், செடிகள், புற்கள் அமைத்து அழகுபடுத்தாததால் வீணாகி வருகிறது.உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, பழநி ரோடு, பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு மற்றும் ராஜேந்திரா ரோடு சந்திப்பில், 2 கோடி ரூபாய் செலவில், சிக்னல் இல்லாத ரவுண்டானா, இரண்டு ஆண்டிற்கு முன் அமைக்கப்பட்டது.ரவுண்டானாவில், பெயின்ட் அடித்தல், சுற்றிலும் தடுப்பு கம்பிகள், மண் கொட்டிய பகுதிகளில், செடி, புற்கள் அமைத்தல் உள்ளிட்ட அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளாமல், வெறும் மண் தரையாக உள்ளது. இதனால், வீடற்றவர்களுக்கும், போதை ஆசாமிகளுக்கும் புகலிடமாக மாறி வருகிறது.அதே போல், ரவுண்டானா மற்றும் ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு மையத்தடுப்புகளில் ஏற்கனவே, இருந்த சிக்னல் கம்பங்கள், இரும்பு தடுப்புகள், மின் கம்பங்கள், ஒயர்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், ரவுண்டானா மற்றும் மையத்தடுப்புகள் அலங்கோலமாக உள்ளது.மேலும், ராஜேந்திரா ரோட்டிலுள்ள பொன்விழா ஸ்துாபியை மறைத்து உள்ள சிக்னல் கம்பமும், மையத்தடுப்புகளில் புற்கள், செடிகள் அமைக்கப்படாமலும் உள்ளது.எனவே, ரவுண்டானா மற்றும் மையத்தடுப்புகளில், புல்வெளி மற்றும் மலர்ச்செடிகள் வைத்து அழகுபடுத்த, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement