திருப்பூர்: திருப்பூர் மாநகர மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர் கூட்டம், ஊத்துக்குளி ரோடு, எம்.எல்.எப்., அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன் தலைமை வகித்தார். பொருளாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.மாநகர மாவட்டசெயலாளர் நாகராஜ் பேசுகையில், ''உள்ளாட்சி தேர்தலுக்கு நாம் கட்சியினர் முழுமையாக தயாராக வேண்டும்.தலைமை பொறுப்புக்கு துரை வைகோ வந்துள்ளார். தி.மு.க., விடம் பேசி கூடுதல் இடங்களை கேட்டு பெறுவோம். மாநகராட்சியில், 60 வார்டுகள் உள்ளன. கூடுதல் வார்டுகளில் நாம் போட்டியிட உள்ளோம். தயாராக இருங்கள்,'' என்றார்.'துரை வைகோ தலைமையின் கீழ் அனைவரும் ஒற்றுமையாக கூட்டணி கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது. திருப்பூரில் நடந்து வரும் 'ஸ்மார்ட்சிட்டி' பணியை வேகப்படுத்த வலியுறுத்துவது,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்தினசாமி, ஒன்றிய செயலாளர் சந்திரகுமார், பனியன் சங்க செயலாளர் மனோகரன், பஞ்சாலை சங்க தலைவர் சம்பத், கொங்கு நகர் செயலாளர் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE