என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டுமே: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (118) | |
Advertisement
சென்னை: ‛‛மின்வாரியம் தொடர்பான சர்ச்சை கருத்து பிரச்னைக்கு ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு வந்த நோட்டீஸூக்கு, ‛என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும் தான்,' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் பி.ஜி.ஆர். எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு தமிழக மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை செய்துள்ளதாக சில ஆவணங்களை பா.ஜ., தலைவர் அண்ணாமலை
என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டுமே: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை

சென்னை: ‛‛மின்வாரியம் தொடர்பான சர்ச்சை கருத்து பிரச்னைக்கு ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு வந்த நோட்டீஸூக்கு, ‛என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும் தான்,' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



கடந்த சில நாட்களுக்கு முன் பி.ஜி.ஆர். எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு தமிழக மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை செய்துள்ளதாக சில ஆவணங்களை பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். டுவிட்டரில் அண்ணாமலையும், செந்தில் பாலாஜியும் பதிலுக்கு பதில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.




மின்சார ஊழல் ஆதாரம் இல்லாம பேசவில்லை! | Annamalai Interview | Dinamalar

latest tamil news

இது தொடர்பாக பி.ஜி.ஆர். நிறுவனம் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீஸில், ஒரு வாரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அவதூறு பரப்பியதற்காக ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.



இதற்குப் பதிலளித்த அண்ணாமலை தனது டுவிட்டரில், ‛‛500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். அறிவாலய அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது'' என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (118)

Joseph Murugan Abdullah - Tirunelveli,இந்தியா
28-அக்-202101:36:08 IST Report Abuse
Joseph Murugan Abdullah நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். Then you are not an IPS. Then speak accordingly. Don't simply trouble the government.
Rate this:
binakam - chennai,இந்தியா
02-நவ-202114:54:46 IST Report Abuse
binakamஉங்க திரு வாயை கொஞ்சம் மூடுங்களேன் பெரிய புண்ணியம். நீயும் வாடிகன் பார்ட்டி யோ <<<<<<<<<<<சக்ராயுதம்>>>>>>>...
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
27-அக்-202123:37:28 IST Report Abuse
raja திராவிடக்கட்சிகளின் அடியாட்களை விட மோசமான தலைவராக வருவார் போல
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-அக்-202123:35:30 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //அறிவாலய அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது// -இன்னொரு ஐநூறு கோடிக்கு அவதூறு வழக்கு ரெடியா? டீம்கா அமைச்சர்கள் எல்லா தொகுதிகளில் இருந்தும் இவர் மீது வழக்கு தொடர்ந்தா இதிலேயே இவரு பதவிக்காலம் முடிஞ்சிடும்.. ஆட்டுக்குட்டி பிரியாணி ஆயிடும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X