சென்னை: தமிழகத்தில் 6 ஆண்டுகளில் டாஸ்மாக்கில் மொத்த நஷ்டம் ரூ.312.43 என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் தான் அதிக வருமானம் வருவதாகவும், அதனால் தான் டாஸ்மாக் கடைகளை திறப்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும் பலரும் கூறிவந்தனர். குறிப்பாக, கொரோனா பரவல் காலத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, தமிழக அரசு வருமானம் ஈட்டி வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 6 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பழனியைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் 2009-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுவரை டாஸ்மாக் நஷ்டத்தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு தமிழ்நாடு வாணிப கழகம் ஆண்டுவாரியான நஷ்டத்தைக் குறிப்பிட்டு தகவல் அனுப்பியிருக்கிறது. அதன்படி, 2010-11ல் ரூ.3.56 கோடி, 2011-12ல் ரூ.1.25 கோடி, 2012-13ல் ரூ.103.64 கோடி, 2013-14ல் ரூ.64.44 கோடி, 2015-16ம் ஆண்டில் ரூ.67.61 கோடி, 2019-20 நிதியாண்டில் ரூ.71.93 கோடிக்கு டாஸ்மாக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பதிலளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-21 நிதியாண்டில் ஏற்பட்டிருக்கும் நஷ்டங்கள் குறித்த கணக்கு தொகுக்கப்படுவதாகவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE