புதுடில்லி :“பயங்கரவாதத்துக்கு எதிராக எல்லை தாண்டியும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் ஜம்மு - காஷ்மீர் அமைதியாக இருக்கிறது. எதிரிகள் பதற்றமாகத்தான் இருக்கின்றனர். ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

எல்லை மாவட்டங்களில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எந்த நாட்டின் ஆதரவையும் பெற முடியவில்லை.முந்தைய காங்., ஆட்சியில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் மென்மையான அணுகுமுறை இருந்தது. தற்போது அப்படி அல்ல.எல்லைக்கு உள்ளே மட்டுமின்றி எல்லை தாண்டியும் பயங்கரவாதத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE