ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா கடந்த அக்,.28ம் தேதி துவங்கி இன்று 3-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. இரண்டாவது நாளாக அரசியல் விழா நடைபெற்றது. பசும்பொன்னில் இன்று (அக்., 30ம் தேதி) நடைபெற்ற அரசு விழாவில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, முதல்வர் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த தேவரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதேபோல் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
முதல்வர் வருகையை ஒட்டி மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE