சென்னை--'டெல்டா மாவட்டங்கள் உட்பட ஒன்பது மாவட்டங்களில், இன்றும், நாளையும்மிக கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை காரணமாக விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மாவட்ட பள்ளி்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்கள் கழித்து பள்ளி திறக்க வேண்டிய நிலையில் மழை காரணமாக மூடப்பபடும் நிலையானது.

வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இலங்கை கடலோர பகுதி மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள்; புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும் மிக கன மழை வரை பெய்யும்.கன்னியாகுமரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் 3, 4ம் தேதிகளில் மிக கன மழை பெய்யும். சென்னையின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.
எச்சரிக்கை
கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசுகிறது. எனவே, 3ம் தேதி வரை, இந்த பகுதிக்குமீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.