காஸியாபாத் : “விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசுக்கு நவ., 26 வரை அவகாசம் இருக்கிறது. அதன் பின்னும் ரத்து செய்யவில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும்,” என, பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறினார்.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லை பகுதிகளில் ஒரு ஆண்டுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வரும் 26ம் தேதி இந்த தொடர் போராட்டத்துக்கு ஓராண்டு நிறைவு அடைகிறது.

இந்நிலையில் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது: பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து சம்யுக்த கிஷாண் மோர்ச்சா என்ற அமைப்பின் கீழ் போராட்டம் நடத்தி வருகின்றன.விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்கு நவ.,26 வரை அவகாசம் அளிக்கிறோம். இல்லையென்றால் நவ.,27 முதல் டில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை தீவிரப் படுத்துவர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE