காபூல்: காபூல் ராணுவ மருத்துவமனையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தலிபான் அமைப்பினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறுகையில், மருத்துவமனை நுழைவுவாயிலில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 50 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் ஆப்கன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ஆனால், அங்கு ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதில் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். சமீப காலமாக தொடர்ந்து ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி வருகின்றனர். இன்று நடந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE