கோவை: 'தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கூடாது' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
சத்குரு வெளியிட்டுள்ள வீடியோ:
நான் சிறுவனாக இருந்தபோது, பட்டாசு வெடிப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு செயலாக இருந்தது. தீபாவளி முடிந்த பிறகும், ஓரிரு மாதங்களுக்கு அந்த பட்டாசுகளை தினமும் வெடித்து மகிழ்வோம். இப்போது சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டும் சிலர், குழந்தைகள் பட்டாசு வெடிக்க கூடாது எனக் கூறுகின்றனர்; இது சரியல்ல.

காற்று மாசுபாடு குறித்து கவலைப்படுபவர்கள், நீங்கள் பட்டாசு வெடிப்பதை தியாகம் செய்து விடுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து ஆனந்தமாக இருக்கட்டும். அன்பிலும், ஆனந்தத்திலும், விழிப்புணர்விலும் நீங்கள் ஒளிர்வது, உங்களை இருளில் தள்ளக்கூடிய இக்கட்டான கட்டங்களில் மிக அவசியம். இந்த தீபாவளி திருநாளில், உங்கள் மனித தன்மையை அதன் முழு சிறப்புடன் ஒளிர செய்திடுங்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE