சோழவந்தான்:''பெரியாறு அணை பிரச்னையில் உண்மை நிலையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்,'' என, சோழவந்தானில் நடந்த அ.தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் உதயகுமார் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் மூன்று முறை பெரியாறு அணையில் 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள போதும், 138.95 ஆக இருந்த போதே கேரள அமைச்சர்கள் அணையை திறந்து விட்டதுடன் பாதுகாப்பு குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளனர்.
அணை திறக்கப்பட்டு 7 நாட்களுக்கு மேலாகிறது. தமிழக அரசின் மவுனத்தை கலைக்கவும், தென்மாவட்ட மக்கள் உரிமையை காக்கவும் அ.தி.மு.க., போராட்டத்தை கையில் எடுத்து உள்ளது. அணையை பார்வையிடுவதை அமைச்சர் துரைமுருகன் சாதனையாக நினைக்கிறார். பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு மக்களுக்கு தீபாவளி பரிசளித்துள்ளது. தி.மு.க., அரசு ஏமாற்றியுள்ளது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE