சென்னை: 2015 க்குப்பின் சென்னையில் மீண்டும் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக நகர்ப்பகுதிகள் பெரும் அளவில் பாதிக்ப்படும் சூழல் உருவாகி உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று விடிய, விடிய மழை கொட்டியது. இந்த மழை இன்னும் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

2015 ல் பெய்த அதிக மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இது போல் இன்று சென்னையின் முக்கிய வீதிகள் தண்ணீரில் மிதக்கிறது. திநகர் துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டது. இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இன்று அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ..மீ., வில்லிவாக்கத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது.
வில்லிவாக்கம் - 19 செ.மீ.,
எம்ஆர்சி நகர்-15 செ.மீ.,
அண்ணா பல்கலை-14 செ.மீ.,
புழல் -13 செ.மீ.,
தரமணி -10 செ.மீ.,
மீனம்பாக்கம்- 09 செ.மீ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE