புதுச்சேரி : பணி நிரந்தரம் செய்யப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்
.இது குறித்து புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்க செயலாளர் தாட்சாயணி விடுத்துள்ள அறிக்கை;மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் கவுரவ ஊழியர் மற்றும் உதவியாளர்கள் குறைந்த சம்பளத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர்.எங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த சட்டசபை கூட்டத் தொட ரில், அங்கன்வாடி ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என முதல்வர் அறிவித்தார்.
அதன்படி பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கு கடந்த செப்டம்பர், அக்டோபர் மாத சம்பளம் இதுவரை வழங் கப்படவில்லை.எனவே முதல்வர் தலையிட்டு, பணி நிரந்தரம் செய்யப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE