பெண் தற்கொலைவானுார்: ஆரோவில் அடுத்த மொரட்டாண்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதுரை வீரன், 47; ஓட்டல் வைத்துள்ளார். இவரது மனைவி செந்தாமரை, 42; இவர், கடந்த 3 ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 5ம் தேதிவீட்டில் செந்தாமரை துாக்கு போட்டுக் கொண்டார். உடன் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இறந்தார். ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைதுவிழுப்புரம் : தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார், சாலாமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற விக்ரம், 21; சவுந்தர்ராஜன், 22; ஆகியோரை கைது செய்தனர்.இதேபோன்று, விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் மணி தலைமையிலான போலீசார் புதுச்சேரி சாலை, சென்னை நெடுஞ்சாலை பகுதிகளில் ரோந்து சென்றபோது, லாட்டரி சீட்டு விற்ற நேருஜி ரோடு சுரேஷ்பாபு, 57; வண்டிமேடு சீனுவாசன், 44; ஆகியோரை கைது செய்தனர்.மது விற்ற இருவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் பேரங்கியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்ந்த பாலாஜி மகன் ஜெயப்பிரகாஷ், 21; என்பவரை கைது செய்து, 57 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் காந்திகுப்பம் புதுகாலனியில் மது பாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்ந்த கலையரசன் மனைவி அமுதா, 38; என்பவரை கைது செய்து 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.லாட்டரி சீட்டு விற்றவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: பாவந்துார் கிராமத்தில் லாட்டரி சீட்டு விற்ற அதே ஊரைச் சேர்ந்த தண்டபாணி, 57; என்பவரை திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.பணத் தகராறு: 4 பேர் மீது வழக்குதிருவெண்ணெய்நல்லுார்: இருவேல்பட்டு காலனியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ஆதிலட்சுமி, 35; சித்தானங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளது. கடந்த 4ம் தேதி முருகன், சித்தானங்கூர் கிராமத்திற்கு சென்று ஜெகதீசனிடம் பணம் கேட்டபோது, இருவருக்குமிடையே வாக்கும் வாதம் ஏற்பட்டது. அப்போது ஜெகதீசன் மகன் சதிஷ், மனைவி மீரா மற்றும் மருமகள் நிர்மலா ஆகிய நான்கு பேர் சேர்ந்து முருகனை தாக்கினர்.ஆதிலட்சுமி அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மகன் மாயம்: தந்தை புகார்திருவெண்ணெய்நல்லுார்: சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் பரசுராமன், 28; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை கடந்த 5ம் தேதி முதல் காணவில்லை. காமராஜ் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.மணல் கடத்தல்: இருவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: அண்டராயனுார் பஸ் நிறுத்தம் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த துலங்கம்பட்டு சங்கர், 40; ராயர் மகன் குரு, 24; ஆகிய இருவரையும் கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE