புதுடில்லி : 'வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வு அடிப்படையிலான பொதுப் பிரிவுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இளநிலை மற்றம் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வை வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களும் எழுதி வருகின்றனர்.எனினும், 'இவர்கள் மருத்துவ கல்லுாரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் சேர, வெளிநாடுகளில் வாழ் இந்திய வம்சாவளியினருக்கான பிரிவுக்கான கவுன்சிலிங்கில் மட்டுமே பங்கேற்கலாம்' என, மத்திய அரசு தெரிவித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நசீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
நடப்பு கல்வியாண்டில் மட்டும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், மற்ற இந்திய மாணவர்களை போல் மருத்துவ கல்லுாரிகளில் சேர, நீட் பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE