திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களில் காணாமல் போன, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 41 மொபைல் போன்கள் மீட்கப்பட்டதாக, எஸ்.பி., செஷாங் சாய் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த, 3 மாதங்களில் கடைகள், பஸ் பயணங்கள், பொது இடங்களில் மொபைல் போன்கள் காணாமல் போனதாக, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் புகார் அளித்தனர்.இதுதொடர்பாக, இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. அதில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 41 மொபைல் போன்களை போலீசார் கண்டறிந்து மீட்டனர்.இதுகுறித்து, எஸ்.பி., செஷாங் சாய் கூறியதாவது:சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., கிருஷ்ணசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்.ஐ., ரோஸ்லின் மற்றும் போலீசார் என, இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதில், 41 மொபைல் போன் மீட்கப்பட்டது.பொதுமக்கள் தங்களது மொபைல் போன்களை தொலைத்துவிட்டால், உடனடியாக 'சைபர் கிரைம்' போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE