ஊத்துக்கோட்டை : தற்காலிக தரைப்பாலம் சேதம் அடைந்த நிலையில், தற்காலிகமாக புதிய பாலத்தின் வழியே பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல் 28 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனாலும் நிறைவு பெறவில்லை.சில தினங்களாக பெய்த கன மழையால், ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் ஏரி நிறைந்து, உபரி நீர் திறக்கப்பட்டது.
வினாடிக்கு, 1,200 கன அடி வீதம் திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் நந்தனம் கால்வாயில் வந்த மழை நீர் ஆகியவை கலந்து, ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதில், ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் மேல் போடப்பட்ட தற்காலிக தரைப்பாலம் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
மூன்று தினங்களாக நிறைவு பெறாத பாலத்தின் வழியே, கார், பைக், வேன் ஆகியவை சென்று கொண்டு இருந்தது.கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பேசி, புதிய பாலத்தின் வழியே பஸ் போக்குவரத்தை துவக்க முடிவெடுக்கப்பட்டது.நேற்று காலை முதல், புதில் பாலத்தில் பஸ் போக்குவரத்து துவங்கியது. லாரி மட்டும் அனுமதிக்கப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE