பெங்களூரு : அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் கடிகேஸ்வரா, கொரவி கிராமத்தில் விஞ்ஞானிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
கலபுரகி சிஞ்சோலி அருகே உள்ள கடிகேஸ்வரா கிராமத்தில் இரண்டு மாதமாக அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அப்பகுதி மக்கள், இரவில் வீடுகளில் தங்காமல் வெளியில் கூடாரம் அமைத்து துாங்குகின்றனர். கடிகேஸ்வரா கிராமத்துக்கு விஞ்ஞானிகள் குழுவினர் நேற்று சென்றனர். கருவி ஒன்றை வைத்து சுவரின் உறுதியை பரிசோதித்தனர். அங்குள்ள சுண்ணாம்பு கல் படிவத்தையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து கொரவி கிராமத்துக்கு சென்றனர்.
அங்குள்ள கொரவஞ்சேஸ்வரி கோவில் கிணற்றில் மண், தாமிரம், பிளாஸ்டிக் என ஆறு குடங்கள் மிதப்பது பார்த்து கிராமத்தினரிடம் கேட்டனர். அவர்கள் கூறுகையில், 'கொரவஞ்சேஸ்வரி தேவிக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்தது. இதை நீர் நிரப்பி உள்ளே விடுவோம். எப்போது வேண்டுமானாலும் மூழ்கும், மிதக்கும்,' என்றனர்
.இங்கு நில நடுக்கம் ஏற்பட நீரின் அடர்த்தியும் காரணமாக இருக்கலாம் என்பதால் அதன் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர். இரு கிராம மக்ககளிடம் பயப்பட தேவையில்லை. உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என நம்பிக்கை தெரிவித்தனர்.சிஞ்சோளி நகரின் வெளிப்பகுதியில் உள்ள கல் குவாரிக்கும் சென்று ஆய்வு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE