கரூர்: கரூர் அருகே நடுரோட்டில், குடிபோதையில் தகராறு செய்த போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் அருகே திருமாநிலையூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 35; இவர், கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் லோகநாதன் குடிபோதையில் ஸ்விப்ட் காரில், தான்தோன்றிமலை பகுதியில் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் டூவீலர்களில் மோதியபடி தாறுமாறாக சென்றார். அவரை, பொதுமக்கள் சிலர் டூவீலரில் விரட்டி சென்று, லோகநாதன் சென்ற காரை, கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே நிறுத்தினர். பிறகு, கரூர் ராயனூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த பிரான்சிஸ், 38; என்பவர், லோகநாதனை தட்டி கேட்டார். அப்போது, லோகநாதன், பிரான்சிஸ்க்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, பிரான்சிஸ் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, தான்தோன்றிமலை போலீசார், போலீஸ்காரர் லோகநாதன் மீது, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE