குளித்தலை: குளித்தலை அடுத்த. தொண்டமாங்கிணம் பஞ்., வடக்கு கருங்கல்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல், 56. இவர் கூலி வேலை செய்கிறார். அதேபகுதியில் வசிப்பவர் சேகர், 49. இவர் தனக்கு சொந்தமான, விவசாய நிலத்தை தங்கவேல் மகன் சுரேஷூக்கு போக்கியமாக எழுதி கொடுத்தார். போக்கியமாக பெற்ற நிலத்தில், சுரேஷ் குடும்பத்தார் கிணறு தோண்டினர். இது தொடர்பாக சுரேஷ் குடும்பத்திற்கும், சேகர் குடும்பத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த அக்., 30ல், தங்கவேல், தன் மனைவி கண்ணகியுடன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த சேகர் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த மதியழகன், 27, அமுதா, 35, மாலதி, 27, ஆகியோர் தங்கவேல், கண்ணகியை தகாத வார்தைகளால் திட்டி, ஆயுதங்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தங்கவேல் தோகைமலை போலீசில் அளித்த புகார்படி, சேகர், மதியழகன், அமுதா, மாலதி ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE