பரமக்குடி : பரமக்குடி அருகே வெங்கடேஸ்வரா காலனி நெசவாளர் குடியிருப்பில்தண்ணீர் சூழ்ந்து இருந்தது.இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று காலை குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் தண்ணீர் செல்ல ஏதுவாக மணல்அள்ளும் இயந்திரம்மூலம் வழி ஏற்படுத்தப்பட்டது.தாசில்தார் தமீம் ராஜா தலைமையில் குடியிருப்பு பகுதியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற மோட்டார்கள் கொண்டு வரப்பட்டன.வரும் நாட்களிலும் மழைநீர் உடனடியாக வடிந்து செல்லும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
காலனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement