காட்டுமன்னார்கோவில்-கடலுார் மாவட்டம் சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணந்தபுரத்தில் கருவாட்டு வாலி ஓடையின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டப்படுகிறது.அதன் அருகில் சிறு குழாய் பதித்து தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது. தற்போதுபெய்து வரும் பலத்த மழையால், கருவாட்டு வாலி ஓடையில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நேற்று முன்தினம் இரவு தற்காலிக சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.இதனால் வீராணந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும்தடைப்பட்டது.தாசில்தார் ராமதாஸ், இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்தனர். இதனால் சிதம்பரம்,காட்டுமன்னார்கோவிலில் இருந்து திருச்சி, ஜெயங்கொண்டம், கும்பகோணம், தஞ்சை போன்ற தென் மாவட்டங்களுக்கு இவ்வழியாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஓடையில் அதிக தண்ணீர் ஓடுவதால் தற்காலிக சாலையையும் சரி செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் அனைத்தும் காட்டுமன்னார்கோவிலில் இருந்து குடிகாடு, பாப்பாக்குடி வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE