உத்திரமேரூர்:உத்திரமேரூரில், நிவாரண முகாமில் தங்கியுள்ளோருக்காக 13 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம், இரு இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் தாலுகாவில், பருவ மழை தீவிரமடைந்துள்ளதையொட்டி, தாழ்வான பகுதி, குடிசை மற்றும் சேதமடைந்த தொகுப்பு வீடுகளில் வசிப்போருக்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில், 15 இடங்ளில் அரசு நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 503 பேர் தங்க வைக்கப்பட்டு, மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
முகாமில் தங்கியுள்ளோரின் உடல்நலனை கருத்தில்கொண்டு, காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், 13 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இரு இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்முகாம்களில் தங்கி உள்ளோருக்கு, உடல்நல குறைபாடு ஏற்பட்டால், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, நோயின் தன்மைக்கேற்ப மருந்து, மாத்திரை வழங்கப்படுவதோடு, நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தாதோருக்கு தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது என, உத்திரமேரூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE