கோவை: அரசின் புதிய திட்டமான, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில், தன்னார்வலர்களை தேர்வு செய்வதில் தலைமையாசிரியர்கள் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசு அறிவித்துள்ள இல்லம் தேடி கல்வித்திட்டத்திற்கு, தன்னார்வலர்கள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். பள்ளிகள் தவிர்த்து மாலை நேரங்களில், 5:00 முதல் 7:00 மணி வரை மாணவர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று, கற்பித்தல் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.கோவை மாவட்டத்தில் இத்திட்டம் சார்ந்த பணிகள் துவக்கப்படவில்லை. மாநில பள்ளிக்கல்வித்துறை மூலம் விண்ணப்பிப்பவர்களின் பெயர் பட்டியல், பகுதி வாரியாக அனுப்பப்படவுள்ளது.இந்நிலையில், தன்னார்வலர்களை தேர்வு செய்யும்போது, நேர்காணல் வைத்து சான்றிதழ்களை மட்டும் சரிபார்க்காமல், திறன், ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும் என, தலைமையாசிரியர்களுக்கு சி.இ.ஓ., கீதா அறிவுறுத்தியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE