111 கோடி 'டோஸ்' தடுப்பூசி இந்தியா அபார சாதனை
111 கோடி 'டோஸ்' தடுப்பூசி இந்தியா அபார சாதனை

111 கோடி 'டோஸ்' தடுப்பூசி இந்தியா அபார சாதனை

Added : நவ 12, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி :நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி 'டோஸ்'களின் எண்ணிக்கை, 111 கோடியை இன்று (நவ.12) கடந்தது. நம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கான தடுப்பூசி இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ள தடுப்பூசி
111 கோடி 'டோஸ்' தடுப்பூசி இந்தியா அபார சாதனை

புதுடில்லி :நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி 'டோஸ்'களின் எண்ணிக்கை, 111 கோடியை இன்று (நவ.12) கடந்தது. நம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதற்கிடையே, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கான தடுப்பூசி இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news


இந்நிலையில் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, 111 கோடியை நேற்று கடந்தது. இரவு 8:00 மணி நிலவரப்படி, 111 கோடியே, 39 லட்சத்து, 10 ஆயிரம் டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டோரின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 39 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.

விரைந்து அனைவருக்கும் இரண்டு டோஸ்களையும் செலுத்தி முடிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்காக வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியது.இந்நிலையில் அந்த திட்டத்தின் கீழ், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நட்குர் என்ற கிராமத்திற்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று சென்றார்.கிராம மக்களின் வீடுகளுக்குள் சென்று அங்குள்ள மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். பின், கிராமத்தில் உள்ள தடுப்பூசி
முகாமிற்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (8)

Srinivas -  ( Posted via: Dinamalar Android App )
13-நவ-202114:16:06 IST Report Abuse
Srinivas Great job done by the concerned authorities. Very good.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
13-நவ-202113:52:58 IST Report Abuse
Visu Iyer இது சாதனை இல்லை வேதனை.. இது ஒரு முன்னோட்டம் தான்.. இதில் வெற்றி என்றால் இனி வருடத்திற்கு இரண்டு ஊசி போட வேண்டியது வரும்.. அதுக்கும் விலை உண்டு.. ஜிஎஸ் டி வரி கூட இருக்கலாம்.. உயிர் வேண்டுமா.. ஊசி வேண்டுமா என்ற நிலைக்கு மக்கள் தல்லப்படுவார்களோ என்ற வேதனை தான் இது சாதனை இல்லை.. வேண்டாம் இப்படி ஒரு போதனை
Rate this:
Cancel
13-நவ-202111:58:09 IST Report Abuse
அப்புசாமி இலவசம்கற வார்த்தை இல்லாத வரை நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X